லக்னோ: உத்தரப்பிரதேசம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.450 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது. சிவனின் உருவத்தை அடிப்படையாக கொண்டு 30 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படவுள்ளது. வாரணாசி சர்வதேச கிரிக்கெட் மைதானம் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்படவுள்ளது.