உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 2 மணி நேரமாகும் என கணிக்கப்பட்ட இறுதிக்கட்ட மீட்புப் பணி 45 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக முடிந்தது. ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.