மதுரா: உத்தரகாண்ட்டில் விரைவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
சாத்வி ரிதம்பராவின் 60வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக விருந்தாவனத்தில் உள்ள வாத்சல்யா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மதத்தினருக்கும் தனிப்பட்ட சட்டங்களின் பொதுவான குறியீடு. உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.