உத்தரப்பிரதேசம்: கவுசாம்பி மாவட்டத்தில் போலீஸ் என்கவுண்டரில் குர்ஃபான் என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டையின் போது போலீசாரிடம் சிக்கிய குர்ஃபான் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது குண்டு பாய்ந்ததால் குர்ஃபான் உயிரிழந்தார்.