கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜவ்வாது மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது 200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.