மதுரை : மதுரை உசிலம்பட்டி அருகே கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெள்ளக்காரன்பட்டி மலையில் கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி ரேவதி என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.