மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் நகராட்சியின் நுண் உர செயலாக்க மையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைக் கிடங்கு முழுவதும் தீ பற்றி எரிந்து வருவதால் பேரையூர் நெடுஞ்சாலை புகை மூட்டமாக காணப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.