Sunday, May 19, 2024
Home » அமெரிக்காவில் பரபரப்பு ரூ.40 கோடி பங்களா வீட்டில் இந்திய தம்பதி, மகள் மர்மசாவு: கடனால் நேர்ந்த பரிதாபம்

அமெரிக்காவில் பரபரப்பு ரூ.40 கோடி பங்களா வீட்டில் இந்திய தம்பதி, மகள் மர்மசாவு: கடனால் நேர்ந்த பரிதாபம்

by Arun Kumar

நியூயார்க்: அமெரிக்காவில் பணக்கார இந்திய தம்பதியும், அவர்களது 18 வயது மகளும் வீட்டில் மர்மமான முறையில் இறந்தது ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் டோவரில் வசித்த இந்திய வம்சாவளி ராகேஷ் கமல் (57). இவரது மனைவி டீனா (54), மகள் அரேனா (18). ராகேஷும், டீனாவும் எஜூநோவா என்கிற கல்விசார் நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த 2019ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2021ல் மூடப்பட்டது. இந்நிலையில், ராகேஷ், டீனா, அரேனா மூவரும் அவர்களது பங்களா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். கடந்த ஓரிரு நாட்களாக அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராததாலும், உறவினர்களுடன் தொடர்பு கொள்ளாததாலும் வந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வீட்டை சோதனையிட்ட போது இறந்து கிடந்தனர்.

இவர்கள் கொல்லப்பட்டார்களா, எப்படி கொல்லப்பட்டார்கள் என்கிற தகவல் வெளியிடப்படவில்லை. ராகேஷ் குடும்பத்தினர் வசித்த 11 படுக்கையறைகள் கொண்ட பங்களா ரூ.40 கோடி மதிப்பிலானது. தொழில் நஷ்டத்தால் இதை ரூ.25 கோடிக்கு கடன் கொடுத்த நிறுவனத்திற்கு விற்றுள்ளனர். டோவர் நகரில் வசிக்கும் மிக பணக்கார குடும்பங்களில் ராகேஷ் குடும்பமும் ஒன்று. வசதியானவர்கள் வசிக்கும் டோவர் பகுதியில் கடந்த 3 ஆண்டாக கொலை உள்ளிட்ட எந்த அசம்பாவித சம்பவமும் பதிவானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

eight − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi