புதுடெல்லி: இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்றிரவு டெல்லி வந்து இறங்கிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது, அமெரிக்காவிடம் இருந்து 30 எம்க்யூ-9பி ரக போர் விமானங்களை ரூ.24,720 கோடிக்கு வாங்குவது குறித்து பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆஸ்டின் டெல்லி வந்து இறங்கியதும் அவரது டிவிட்டரில், “இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா வந்துள்ளேன்,” என்று கூறியுள்ளார்.