புதுக்கோட்டை: தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் பேட்டியளித்தார். அப்போது, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.