டெல்லி: ஒன்றிய அரசின் ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு முதல் முறையாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் 13 மொழிகளில் நாடு முழுவதும் காவலர் தேர்வு நடைபெறும். நாடு முழுவதும் 128 நகரங்களில் பிப்.20 முதல் மார்ச் 7 வரை நடைபெறும் தேர்வை 48 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.