டெல்லி: ஒன்றிய அரசை கண்டித்து ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளை தடுக்கும் வகையில் கண்ணீர் புகைக் குண்டுகள், முள் வேலி, கான்க்ரீட் தடுப்புகள், தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன.