Monday, May 29, 2023
Home » ஒன்றிய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வில் பங்கேற்போருக்கு இலவச பயிற்சி: கலெக்டர் தகவல்

ஒன்றிய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வில் பங்கேற்போருக்கு இலவச பயிற்சி: கலெக்டர் தகவல்

by Arun Kumar

அரியலூர், ஏப்.18: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; ஒன்றிய மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் பிரத்யேகமாக மற்றும் Youtube Channel இணையதளம் Employment உருவாக்கப்பட்டுள்ளது. மேற்காணும் இணையதளம் மற்றும் Youtube Channel-லில் TNPSC, TNUSRB, IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள சார்நிலை ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலைகாவலர் பணிக்காலியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (ஏப்.19) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது.

இப்பணிக் காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் தங்களது ஆதார் அட்டைநகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi