ஊத்துக்கோட்டை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியபாளையம் பஸ் நிலைய வளாகத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி தலைமை வகித்தார். பூண்டி ஒன்றியசெயலாளர் டி.கே.சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.பி.ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், தாராட்சி கார்த்திகேயன், ஏனம்பாக்கம் சம்பத், துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 100 பேருக்கு சீருடை வழங்கினார். இதன்பின்னர் திமுக சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கினார். விழாவில், ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் குணசேகரன், ஜமுனா அப்புன், டில்லிசங்கர், சிவசங்கர், சண்முகம், வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வடமதுரை அப்புன், பெரியபாளையம் ஐ.ராஜா, ஆத்துப்பாக்கம் வேலு, நிர்வாகிகள் சந்திரசேகர், வக்கீல் பாஸ்கர், ராஜா, சம்பத், வடிவேலு, அசோக், ஏழுமலை, கவுதமன், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் எல்லப்பன், சுரேஷ் கலந்துகொண்டனர்.