டெஹ்ராடூன் : பாஜக ஆட்சியில் உள்ள உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது. சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ரஞ்சனா பிரகாஷ் தேசாய் குழு ஆய்வு செய்தது.தேசாய் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பொது சிவில் சட்ட மசோதா பேரவையில் தாக்கலாகிறது. பொது சிவில் சட்ட மசோதா தாக்கலாக உள்ள நிலையில் டேஹ்ராடூனில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.