சென்னை: கீழ் மருவத்தூர் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என ராஜா என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ஜன.11-ல் அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.