சென்னை: அமைச்சர் உதயநிதி மீதான தாக்குதல் தீய நோக்கம் கொண்டது என்று இந்திய காம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சனாதனம் குறித்து உதயநிதி தெரிவித்த கருத்து, பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருவதுதான். கடந்த காலங்களில் வாய் மூடி கடந்து சென்ற பாஜக, தற்போது வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதித்து வருகிறது. சனாதனக் கருத்தியல், பகுத்தறிவு சிந்தனைக்கும் அறிவியல் கண்ணோட்டத்துக்கும் எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.