தூத்துக்குடி, ஆக. 28: தூத்துக்குடி உச்சிமாகாளியம்மன் கோயில் உழவாரப்பணியை முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் உள்ள உச்சினி மாகாளியம்மன் கோயிலில் உழவாரப்பணி இந்து முன்னணி மாநகர் மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் நடந்தது. இதை காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி துவக்கிவைத்தார். இதில் இந்து முன்னணியினர், பக்தர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தூய்மைப் பணி மற்றும் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து தீர்த்தக்கரை சங்குமுக விநாயகர் கோயில், வடக்கு மண்டலம் கைவல்ய சாமி மடம், மேற்கு மண்டலம் இசக்கியம்மன் கோயில், தூத்துக்குடி அருகே உள்ள பெரும்படை சாஸ்தா கோயில், ஓட்டப்பிடாரம் காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் உழவாரப்பணிகள் மேற்கொண்டனர்.