தூத்துக்குடி: தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸை கொன்ற இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.