சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரங்களை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.