தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.கோவில்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, மஞ்சநாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. லாரி மீது மோதியதில் தனியார் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது.