சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தினால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. மாவட்ட குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரிய அளவில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர், அவர்கள் அரசியல் கட்சி சார்புடன் உள்ளனர் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.