அம்பை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கி ராஜ் (30), ஏசி மெக்கானிக். இவர், தாய் அலங்காரி என்ற சரஸ்வதி (50), தங்கை இசக்கியம்மாள் என்ற கார்த்திகா (25), தங்கையின் 2 வயது குழந்தை சந்துரு ஆகியோருடன் ஒரே பைக்கில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் உறவினர் இல்ல காதுகுத்து நிகழ்ச்சிக்கு நேற்று பாபநாசம் சென்று கொண்டிருந்தனர்.
பைக் மீது, கோடாரங்குளம் விலக்கு அருகில் டிப்பர் லாரி மோதியது. இதில் இசக்கிராஜ் உட்பட 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிந்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த அசோக் ராஜ் (33) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான இசக்கிராஜிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.