திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 23-ல் பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உறங்கியுள்ளார். காலையில் கம்பெனிக்கு வந்த லாரியை மேனேஜர் சோதனை செய்தபோது உதிரிபாகங்கள் காணாமல்போயிருந்தது தெரியவந்தது. ஓட்டுநரிடம் விசாரித்ததில் லாரியை பெட்ரோல் பங்கில் நிறுத்தியதாக கூறியதை அடுத்து போலீசில் புகார் அளித்தார். உதிரிபாகங்களை திருடிய வழக்கில் முத்து, அருள்குமார், ஸ்ரீதரன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.