திருச்சி: திருச்சியில் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவர் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இழப்பீடு வழங்குவது குறித்து திருச்சி காஜாமியான் பள்ளி நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. தாக்குதலில் மூளை பாதிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருச்சி போலீசை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.