Wednesday, May 8, 2024
Home » திருச்சியில் அதிகாலை பரபரப்பு 1 கிலோ தங்கத்துடன் வியாபாரி காரில் கடத்தல்: ஒருவர் சிக்கினார்

திருச்சியில் அதிகாலை பரபரப்பு 1 கிலோ தங்கத்துடன் வியாபாரி காரில் கடத்தல்: ஒருவர் சிக்கினார்

by Karthik Yash
Published: Last Updated on

திருச்சி: திருச்சியில் 1 கிலோ தங்கத்துடன் வாலிபர் காரில் நேற்று கடத் தப்பட்டார். கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார். திருச்சி அரசு மருத்துவமனை ஜெனரல் பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா(35). இவர், நண்பர்களுடன் நேற்று திருச்சி விமான நிலையம் சென்றார். பின்னர், அங்கிருந்து தங்கம் மற்றும் ரூ. 3 லட்சம் பணத்துடன் காரில் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அதிகாலை 2.10 மணியளவில் வீட்டிற்கு வந்தவரை பின் தொடர்ந்து கார் மற்றும் டூவீலரில் ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல், அவரை தாக்கி தங்கம் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு, சாதிக் பாட்ஷாவைும் காரில் ஏற்றி சென்றனர்.

இதை பார்த்து உறவினர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா ஆகியோர் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த கதிரேசன்(21) என்பது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த கும்பல், சமயபுரம் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் பகுதியில் காரிலிருந்து சாதிக் பாட்ஷாவை இறக்கி விட்டு விட்டு தப்பியது. போலீசார் சாதிக் பாட்ஷாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து, சாதிக் பாட்ஷாவிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்துடன் தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

இடைத்தரகர்களின் தொழில் போட்டியா? இந்த சம்பவத்தில் சாதிக்பாட்ஷா மற்றும் கைதான கதிரேசன் ஆகிய இருவரும் இடைத்தரர்கள் என தெரிகிறது.விமான நிலையத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் முகாமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வெளிநாட்டில் இருந்து வந்த நபரிடம் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டு சாதிக்பாட்ஷா வீட்டிற்கு திரும்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கதிரேசன், தனது சகாக்களுடன் வந்து சாதிக்பாட்ஷாவை தாக்கி விட்டு தங்கத்தை பறித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை போனது என தெரிவித்தால், அதற்குரிய ஆவணங்களை ஒப்படைக்க நேரிடும் என்பதால், சாதிக்பாட்ஷா தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

19 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi