மதுரை: திருச்சி, புலிவலம் கிராமத்தில் உள்ள கோயிலில் வழிபாடு செய்யவிடாமல் தீண்டாமை செயல் நடைபெறுகிறதா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம், மறுமணம் செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.