திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்தவரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 6,000 அமெரிக்க டாலர்கள் மற்றும் 1,100 மலேசியன் ரிங்கட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.