காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஆண்டுகளுக்குமேல் ஒரே ஊராட்சியிஸ் பணிபுரியும் 20 ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யுமாறு உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர், வாலாஜாபாத் பிடிஓக்களுக்கு அனுப்பியுள்ள செய்திகுறிப்பு:
அதன்படி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அகரம்தூளி ஊராட்சி செயலாளர் வரகுணபாண்டியன், சின்னாளம்பாடி லட்சுமணன், இடையம்புதூர் தேவராஜ், களியாம்பூண்டி வேலு, கம்மாளம்பூண்டி கோதண்டராமன், காவனூர் புதுச்சேரி மோகனரங்கன், குருமஞ்சேரி சாந்தி, மதூர் தட்சணாமூர்த்தி, மருத்துவம்பாடி சரஸ்வதி, மேல்பாக்கம் சரவணன், நாஞ்சிபுரம் குருமூர்த்தி, ஒரக்காட்டுபேட்டை ரேணுகா, பாலேஸ்வரம் தேவராஜ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யுமாறு வட்டார வளரச்சி அலுவலருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், பினாயூர் ரகு, புலிவாய் கடம்பன், இராவுத்தநல்லூர் திருநாவுக்கரசு, சிலாம்பாக்கம் மஞ்சுளா, சிறுமயிலூர் தட்சணாமூர்த்தி, தண்டரை நடனவேலு, திருமுக்கூடல் உமா ஆகியோரையும் உத்திரமேரூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பணியிட மாற்றம் செய்யுமாறு கலெக்டர் கலைசெச்வி, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில், அகரம் ஊராட்சி செயலாளர் சிகாமணி, ஆலப்பாக்கம் தாமோதரன், கோவிந்தவாடி சாந்தமூர்த்தி, இலுப்பப்பட்டு உமாபதி, ஈஞ்சம்பாக்கம் தாஸ், காரை ஜானகிராமன், கொட்டவாக்கம் ராகவன், கூத்திரம்பாக்கமா் முனிராஜ், மருதம் புண்ணியக்கோட்டி, நாயக்கன்குப்பம் திருவேங்கடம், ஒழையூர் பாஸ்கர், புள்ளலூர் விஸ்வநாதன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புளியம்பாக்கம் ஜெயந்தி, புத்தகரம் பாரதி, புதுப்பாக்கம் தமிழ்ச்செல்வி, சிறுவாக்கம் நாகவேல், தண்டலம் மகேஸ்வரி, தாங்கி சாந்தி, திருவங்கரணை வேலுமணி, தொடூர் பார்த்திபன், தொள்ளாழி கற்பகம், உள்ளாவூர் முனுசாமி, ஊவேரி குமார், வையாவூர் ஜெகஜீவராமன், வளத்தூர் வெங்கடேசன், வாரணவாசி சுஜாதா, வேளியூர் சரவணன், வில்லிவலம் சாந்தி ஆகிய ஊராட்சி செயலர்களையும் அதே ஊராட்சிக்குள் பணியிட மாற்றம் செய்யுமாறு கலெக்டர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தி உள்ளார்.