சென்னை: மோசமான ரயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை ஒன்றிய அரசு விளக்க வேண்டும் எனவும் கவாச் தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனவும் தொழில்நுட்பம் வளர்ந்து பிறகும் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பது வேதனை அளிக்கிறது எனவும் திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடந்த ஒருமணி நேரத்துக்குள்ளாகவே ஒடிசா முதல்வரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடர்பு கொண்டார் என ஆ.ராசா கூறியுள்ளார்.