Sunday, June 16, 2024
Home » வியாபாரியை தாக்கி பணம் பறித்த இருவர் சிறையில் அடைப்பு

வியாபாரியை தாக்கி பணம் பறித்த இருவர் சிறையில் அடைப்பு

by Dhanush Kumar

அண்ணாநகர்: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கதிரவன் (26). இவர், கடந்த 29ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மினி வாகனத்தில் முருங்கைக்காய் ஏற்றிக்கொண்டு வந்தார். லோடு இறக்கிவிட்டு தனது வாகனத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், கதிரவனை எழுப்பி சரமாரியாக தாக்கி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடினர். இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான குற்றவாளி கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவல்படி, போலீசார் சென்று நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவல்படி, சென்னை பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரது கூட்டாளி மணிகண்டன் (23) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

twelve + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi