செங்கல்பட்டு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (26ம் தேதி) காலை 8 மணியளவில் குடியரசு நாள் விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன்ஆகியோர் அவரவர் மாவட்டங்களில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொள்ள உள்ளார். மேலும், விடுதலை போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டு, அரசின் நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.