டோக்கியோ: ஜப்பானில் ஓடுதளத்தில் விமானம் தீப்பிடித்து எறிந்த போது மறுபுறத்தில் அவசரகால கதவு வழியாக பயணிகள் வெளியேறும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. டோக்கியோவில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கிய போது கடலோர காவல்படை விமானம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் விமானம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால் பதற்றம் நிலவியது. இந்த சூழலில் விமானத்தில் சிக்கிய 367 பயணிகளையும் மீட்ட பரபரப்பு காட்சிகள் வெளிவந்துள்ளன.
விமானத்தில் ஒரு பகுதி தீயால் சூழ்ந்து எறிந்த போது பொது அறிவிப்பு கருவி இண்டர்காம் செயல்பட நிலையில், பணிப்பெண்கள் நிதானமாக பயணிகளை கையாண்டதாக கூறுகின்றனர். விமானத்தில் இருந்த 8 அவசர கால கதவுகளில் எது பாதுகாப்பானவை என தேர்வு செய்து அங்கு பயணிகளை அழைத்து சென்றதாகவும், அப்போது உடைமைகளை விட்டுவிட்டு உடனே வெளியேறும் படி கேட்டுக்கொண்டதாகவும் தப்பித்த பயணிகள் திகைப்புடன் கூறுகின்றனர். விமானத்தில் இருந்த கேப்டன் தான் அவரசகால வாயிலில் இன்று பயணிகளுக்கு வழிகாட்டியுள்ளார். குறிப்பாக விமானம் தீப்பற்றிய பிறகு 18 நிமிடங்களுக்குள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதன் பிறகு 10 நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் விமானம் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கின்றனர்.