சென்னை: டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படும் தொகுதி 4 பணியிடங்களை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இனி வரும் காலங்களில் ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.