திருவாருர்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாளை சட்டப்பேரவையில் பேச உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். திருவாருர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.