திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமையான நேற்று 79,242 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,039 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.76 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.
இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 13 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.