திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்த பக்தர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சர்வ தரிசன நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் காத்திருப்புக்கு பின் சுாமி தரிசனம் செய்ய வைக்கப்படுகிறது. இது தவிர எந்த வித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.