மதுரை : மதுரை திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை இடிப்பது தொடர்பாக அரசு வெளியிட்ட நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட். திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை அமைப்பது தொடர்பாக 3 மாதங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் திருமங்கலம் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவது எந்தப் பலனும் அளிக்காது என்றும் ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். திருமங்கலம் பழைய பேருந்து நிலைய கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.