தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் கலைக்கட்டியுள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண திருச்செந்தூரில் பக்தர்கள் திரண்டுள்ளனர். திருச்செந்தூரில் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் ‘அரோகரா… முழக்கங்கள் விண்ணைப் பிளக்கிறது. கடற்கரையில் முருகர் ஜெயந்தி நாதர், சூரனை வதம் செய்கிறார்.