சத்தியமங்கலம் வளப்பகுதியில் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளதாகவும் தமிழக வனத்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வழக்கில் அவரை கைது செய்ய சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. யானை வேட்டை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் காணொலி மூலம் நவ.8ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
புலி வேட்டையில் பவாரியா கொள்ளையர்களுக்கு தொடர்பு: தமிழக வனத்துறை
previous post