தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்கள் அரசு அதிகாரிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் அரசு பணியாளர்களுக்கும் பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.