டெல்லி: இந்த ஆண்டில் மட்டும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில் அளித்திருக்கிறது. இந்திய மீனவர்கள் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட நாடுகளோடு புரிந்துணர்வை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.