ஆவடி: ஆவடி அடுத்து திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி(42). இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மாமனார், மாமியாரை பார்க்க முன் கதவை பூட்டாமல் கிரில் கேட்டை மட்டும் பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் மதியம் 1.30 மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் முன் பக்கம் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்துக் மர்ம நபர்கள் தப்பித்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, லட்சுமி திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநின்றவூர் பகுதியில் வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை
previous post