சென்னை: சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், ஒன்றிய, மாநில முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் எம்பி பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு எனது தலைமையில் சென்னை அரும்பாக்கம் பழைய பஸ் நிலையம் அருகில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை மாலை 6 மணி அளவில் நடக்கிறது. மதன்பாலு முன்னிலை வகிக்கிறார். மாவட்ட துணை தலைவர்கள் மோகனரங்கம், கணபதி, விஜய் வரவேற்கின்றனர். கார்த்திகேயன், மிதுன் சக்கரவர்த்தி, தமிழ் அரசன், தமிழ்வாணன் நன்றி கூறுகின்றனர்.
காங். சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், விஜய் வசந்த், முன்னாள் எம்பி ஆரூண், மாநில துணை தலைவர் நாசே.ராமச்சந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், மாநில துணை தலைவர் சேதுராமன், பொதுச்செயலாளர் தணிகாசலம், மாநில செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். ஆசிரமங்களில் மதிய உணவு வழங்கப்படும். கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட காங்கிரஸ் மூத்த முன்னோடிகள், தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.