திருக்காட்டுப்பள்ளி, ஏப். 27: திருக்காட்டுப்பள்ளியில் நிகழாண்டு துவக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய விழா, விளையாட்டு விழா, முதலாம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக நேற்று நடைபெற்றது. கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் பாலு வரவேற்றார். முதல்வர் .வரதராஜா விழாத் தலைமை ஏற்று ஆண்டறிக்கைப் படித்தார். பூதலூர் ஒன்றியக் குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு (எ) அரங்கநாதன் முன்னிலை வகித்தார். திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முதல்வர் ரோசி இலக்கிய உரையாற்றினார். விழாவில்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆங்கிலத் துறை தலைவர் ஆகாஷ் நன்றி கூறினார்.