திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழமையான ஆலமரத்தை வெட்ட தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆலமரத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.