தேனி: தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடத்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் அதிகப்படியான தண்ணீர் கொட்டுகின்றது. குமுளி வழியாக கேரளா செல்வோர் சாலையில் இருந்தவாறு நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டுவதை கண்டு ரசித்தனர்.