சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். தீபாவளியன்று திருப்பூர் சுப்பிரமணியத்தின் திரையரங்கில் அனுமதியின்றி காலை காட்சி திரையிட்டதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் பதவி விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இந்தி திரைப்படத்துக்கு பொருந்தாது என்று நினைத்து காலை சிறப்பு காட்சியை ஒளிபரப்பிவிட்டனர் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.