சென்னை: பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்தெரிவித்துள்ளார். திமுக மீது பா. .ஜ.க.வுக்கு கோபம், வெறுப்பு இருக்கிறது. பா.ஜ.க. எதிர்ப்பு நடவடிக்கையை திமுக குறைத்துக்கொள்ள அச்சுறுத்தும் நடவடிக்கையாக சோதனை நடைபெறுகிறது. 2 வழக்குகளில் பொன்முடி குற்றமற்றவர் என்று வெளியே வந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே பயமுறுத்துவதற்காகவே அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது ஒன்றிய அரசு. பா.ஜ.க.வுக்கு எதிரான கொள்கை ரீதியான யுத்தத்தை திமுக இன்னும் வீரியத்துடன் மேற்கொள்ளும். குஜராத்தில் 4 பாலங்கள் இடிந்துள்ளன, அங்கு உள்ள ஊழல்களை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தைரியம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வேகத்தை குறைப்பதற்காக அமலாக்கத்துறையை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.