Tuesday, April 30, 2024
Home » நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி

by Ranjith

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே நீச்சல் பழகச்சென்ற சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியானான். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அருகே படப்பை அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (39). இவருக்கு, தாரிகா (35) என்ற மனைவியும், சஸ்வின் வைபவ் (6), சித்விக் வைபவ் (2) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நந்தகுமாரின் மனைவி தாரிகா, தனது முதல் மகன் சஸ்வின் வைபவிற்கு, நீச்சல் பழகுவதற்காக, அதே பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு 2 மகன்களையும் அழைத்து சென்றார். அங்கு, குளத்தில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த சஸ்வின் வைபவ் திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கியுள்ளான்.

இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக சஸ்வின் வைபவை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவன் சஸ்வின் வைபவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi